கேட்ககூடாததை கேட்ட மனைவி.! ஆத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்த கணவன்.!
suicide in krishnagiri
கிருஷ்ணகிரி அருகே இருக்கும் சவுளூர் என்ற பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் திம்மராயன் (27) இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். திம்மராயனுக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
அதன் பின்னர் அவரது மனைவிக்கும், அவருக்கும் குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டு இருக்கின்றது. அடிக்கடி அவரது மனைவி கோபித்து கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். இவ்வாறாக சமீபத்தில் ஏற்பட்ட சண்டையில் தனது தாய்வீட்டிற்கு சென்ற மனைவி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த திம்மராயன் நேற்று முன்தினம் இரவு நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலை வெகு நேரமாகியும் எழுந்து வராததால், அவரது பெற்றோர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கே திம்மராயன் இருந்த காட்சியை பார்த்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றனர்.
அங்கே அவர் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டிருந்துள்ளார். பின்னர் இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் திம்மராயன் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.