இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை.! வெளியான கண்ணீர் தகவல்.. இறுதி உரையாடல்.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயப்பன்பாளையத்தை சார்ந்தவர் காளியப்பன். இவரது மகனின் பெயர் தனுஷ்கோடி (வயது 20)., இவர் இன்ஜினியராக இருந்து வரும் நிலையில்., கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலமாக நாமக்கல்லை சார்ந்த பெண்ணி என்ற 18 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் முதலில் நட்புடன் பழகிவந்த நிலையில்., பின்னர் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இதனையடுத்து தனுஷ்கோடி நாமக்கல்லுக்கு சென்று அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். 

Image result for love www.seithipunal.com

தனது காதல் மனைவியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து வசித்து வந்துள்ள தருணத்தில்., பென்னி தனது கணவருடன் கடந்த வாரம் நாமக்கல்லில் இருக்கும் பெண்ணியின் தாயாரின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.  

இந்த சமயத்தில்., பென்னிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஓரிரு நாட்கள் கழித்து தனது ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ள நிலையில்., பெண்ணின் பெற்றோர் தனது மகளுக்கு உடல்நிலை சீரானதும் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். 

மேலும்., நீங்கள் ஊருக்கு செல்லுங்கள் நான் ஒரு நாட்களில் வருகிறேன் என்று பென்னியும் கூறியுள்ளார். காதல் மனைவியை பிரிந்து வர மனம் இல்லாத ஏக்கத்தில் இருந்த தனுஷ்கோடி., சின்ன சேலத்திற்கு வந்து தந்தையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  

எனது மனைவி பென்னி தன்னுடன் வரவில்லை என்றும்., அவர்களின் பெற்றோர்கள் எங்களை பிரித்து விடுவாரோ? என்று சந்தேகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பென்னி இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க இயலாது என்றும்., நான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். 

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த காளியப்பன் தனது உறவினர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தி., அங்குள்ள இடங்களில் தனது மகனை தேடிய நிலையில்., அம்மையகரம் இரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக இருப்பதாக காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. 

Image result for suicide attempt www.seithipunal.com

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்., அங்கிருந்த அடையாள அட்டைகள் மற்றும் பிற அடையாளங்களை வைத்து தனுஷ்கோடி என்பது உறுதி செய்ததை அடுத்து., காளியப்பனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டபோது., நேற்று இரவு சேலத்தில் இருந்து விருதாச்சலம் செல்லும் பயணிகள் ரயில் முன்பு வாலிபர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து தனுஷ் கோடியின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., காதல் மனைவி தன்னுடன் வரவில்லை என்று கூறி புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide in kallakurichi kachirapalayam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->