அரசு வேலைக்கு ஆசை.!! "கண்டமனுர் ஜமீன்" கதையாக தொடரும்.,தூத்துக்குடி பெண்ணின் கள்ளக்காதல்கள்.!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவர், அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தரக் கோரி அங்கிருக்கும் அரசியல்வாதி ஒருவரிடம் 40,000 பணம் மற்றும் 8 பவுன் நகையை கொடுத்து இருக்கின்றார். இந்த வேலை தொடர்பாக அந்தப் பெண்ணும் அரசியல்வாதியும் அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பல்வேறு விடுதிகளில் ஒன்றாக தங்கும் அளவிற்கு அவர்களின் உறவு நீடித்தது. ஆனால், அந்த அரசியல் புள்ளி அவரது மகனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தபாடில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. அந்தப் பெண் பணம் மற்றும் நகையை திருப்பி கேட்டதால், உறவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மல்லிகா காவல் நிலையத்தில் அந்த அரசியல் பிரமுகர் குறித்து புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தின் அதிகாரி மல்லிகாவிடம் அடிக்கடி செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு வழக்கு குறித்து விசாரித்துள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருடன் மல்லிகா ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக அந்த பெண்ணை திருச்செந்தூரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று தங்கி உள்ளார்.

இதுகுறித்து சிறப்பு பிரிவு காவல்துறையினர் எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். முன்னதாகவே தகவல் தெரிந்து கொண்ட எஸ்ஐ அந்த பெண்ணுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அந்த விடுதியில் ரூம் புக் செய்த ஆதாரங்களை தூத்துக்குடி எஸ்பிக்கு சிறப்பு பிரிவு அதிகாரிகள் செல்போனில் படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து எஸ்பி சம்பந்தப்பட்டஎஸ் ஐயை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news

Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sub inspector enjoy with girl who complaints to station


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->