தாயை அன்பாக கவனித்த இளைஞரை கரம்பிடித்த இரட்டை சகோதரிகள்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா : சோலாப்பூரில்  தாயை பாசமாக கவனித்துக்கொண்டு இளைஞரை இரட்டை சகோதரிகள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களான ரிங்கி, பிங்கி இரட்டை சகோதரிகள் (36 வயது), ஒரே மேடையில் ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டனர்.

இரட்டை சகதோரிகளின் தந்தை சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட, இருவரும் தாயுடன் வசித்து வந்துள்ளனர். தாய்க்கு உடல்நல குறைவு இருந்ததாக தெரிகிறது.

தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது கால் டாக்சி ஓட்டுநர் அதுல் என்பவர்,  ரிங்கி, பிங்கியின் தாய் மீது அக்கறையுடன் கவனித்து கொண்டுள்ளார்.

இதனால் அதுலை ரிங்கி, பிங்கி இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இதற்கிடையே, மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது சட்டப்படி குற்றம் என்பதால் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solapur twin sisters marry man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->