#தமிழகம் | சிறுவனை கடத்தி சென்ற நாடக காதலி, 3 மாதம் கர்ப்பம்! போலீசிடம் சிக்கியது எப்படி?!  - Seithipunal
Seithipunal


17 வயது சிறுவனை கடத்தி திருமணம் செய்து, கர்ப்பமான நிலையில் நாடகக் காதலியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது நிரம்பிய சிறுவன் ஒருவனை, கல்லூரி படிக்கும் மாணவி கடத்திச் சென்று திருமணம் செய்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு செங்கரடு கிராமத்தை சேர்ந்த  17 வயது சிறுவன் மாயமாக்கியதாக, சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை சிறுவனின் பெற்றோர் தாக்கல் செய்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர், சிறுவனை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது.

மேலும் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் நடத்தி விசாரணையில், கல்லூரி மாணவியும், சிறுவனும் கிருஷ்ணகிரியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. 

இதனை அடுத்து இருவரையும் மீட்ட சேலம் கருப்பூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுவனை ஆசை வார்த்தை கூறி, காதல் என்ற போர்வையில் கல்லூரி மாணவி கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

மேலும், அந்த கல்லூரி மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிய வந்தது. இதனை அடுத்து இளம் பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem police arrest drama lover oct


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->