ஒருதலைக்காதல், ஒத்துக்கொள்ளாத காதலி.! செய்யக்கூடாத வேலையை செய்த காதலன்.! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம், புளியங்குடி அருகே திருவேட்டநல்லூரைச் சேர்ந்த சண்முகவேல் என்பவருக்கு திருப்பதி என்ற மகன் மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் விடுதியில் தங்கி இருந்தவாறு கல்லூரிக்கு சென்று வருவார்.

ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் இவரது காதலை ஏற்கவில்லை. அந்த பெண்ணிடம் பலமுறை தனது காதலை தெரிவித்தும் அவர்கள் சம்மதம் தெரிவிக்காததால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது.

suicide, seithipunal

இதன் காரணமாக, அதிக மன உளைச்சல் அடைந்த திருப்பதி நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். இவர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

அதன் பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பதியின் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒருதலை காதலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one side love suicide in nellai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->