ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்த பெண்.. காதலர் தினத்தன்று சிக்கிய அவலம்.. பிறகு நடந்த விபரீதம்.!
one girl love with 2 boys
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ராசிபன் என்ற இளைஞர், பேன்சி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். அந்த கடைக்கு வந்த ஆஸ்மி என்ற பெண்ணுடன், ராசிபனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இது காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணிற்கு ராசிபன் நிறைய கிப்ட் மற்றும் தங்க சங்கிலிகளை வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் இணைந்து வெளியே ஊர் சுற்றி உள்ளனர். ராசிபனின் பணத்தை அதிகளவில் ஆஸ்மி செலவு செய்து உள்ளார்.
சில நாட்கள் கழித்து ராசிபனியிடம் அந்தப் பெண் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த ராசிபன் காதலர் தினத்தன்று நேராக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது காதலி வேறு ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராசிபன் அந்த இளைஞருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனை பார்த்து பபயந்து போய் அருகில் இருந்த காவல்துறையில் புகார் அளித்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது ஆஸ்மி ராசிபன் யார் என எனக்கு தெரியாது. இவர் ஒரு தலையாக என்னை காதலித்து விட்டு இப்படி செய்கிறார் என கூறினார். இதனால் மனமுடைந்த ராசிபன் காவல் நிலையத்திற்கு வெளியே சென்று மனம் உடைந்து அமர்ந்துள்ளார்.
பலர் சமாதானம் செய்தும் எந்த அசைவுமின்றி அங்கேயே அமர்ந்து இருந்துள்ளார். இச்சம்பவம் ராசிபன் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
one girl love with 2 boys