மருத்துவருடன் கொண்ட தகாத உறவில் தகராறு! பழிவாங்க வெறியோடு நர்ஸ் செய்த படுபயங்கரமான காரியம்.!
nurse attack doctor for illegal relationship
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஆதர்ஷ். மருத்துவரான இவருக்கு, அவர் பணிபுரியும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்ஸ் அருணகுமாரி என்பவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.மேலும் அருணகுமாரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது
இந்நிலையில் ஆதர்ஷ்க்கும் அருணகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர் அருணாகுமாரியுடனான உறவை திடீரென முறித்துக்கொண்டுள்ளார். இதனால் அருணகுமாரி மருத்துவர் ஆதர்ஷ் பயங்கரமான கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடனான உறவை முறித்துக்கொண்ட ஆதர்ஷை பழிவாங்க திட்டமிட்ட அருணகுமாரி, அவர் மீது ஆசிட்டை வீசியுள்ளார் இதில் ஆதர்ஷ் அதிர்ஷ்டவசமாக எத்தகைய பாதிப்பும் இல்லாமல் தப்பியுள்ளார் .
இதையடுத்து ஆதர்ஷ் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அருணகுமாரியை கைது செய்தனர்.பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து அருணகுமாரியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
nurse attack doctor for illegal relationship