தட்டி கேட்ட காதலனை, கட்டியணைக்க கூப்பிட்டு., கட்டம் கட்டிய காதலி.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலன் ஒருவரை தீர்த்துக்கட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

உமா என்ற 28 வயது இளம்பெண் தன்னுடைய கணவரோடு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவர் திருமணத்திற்கு முன்பு காதல் செய்த யோகேஷ் என்பவர் குறுக்கே வந்துள்ளார். எனவே, கணவன் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து குற்றம் சுமத்திவிட்டு காதலனுடன் வாழ முடிவு செய்து உமா ஓடி வந்து இருக்கின்றார். 

ஆனால் காதலனோ அவரை திருமணம் செய்து கொள்ளாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார். இதன்காரணமாக விரக்தியடைந்த உமா புதிதாக ஒரு காதலனை தேடி பிடித்து இருக்கின்றார். இதனை தொடர்ந்து புதுக் காதலன் சுனில் உடன் உமா சுற்றி வருவதை கண்ட யோகேஷ் இருவரையும் கண்டித்து இருக்கின்றார். 

இதன்காரணமாக ஆத்திரமடைந்த உமா யோகேஷை கொலை செய்ய திட்டம் தீட்டி அவரை தனிமையான இடம் ஒன்றுக்கு வரவழைத்து இருக்கின்றார். காதலியின் ஆசை பேச்சை கேட்டு வந்த யோகேஷ்க்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. இளம்பெண்ணும், சுனிலும் சேர்ந்து யோகேஷை அடித்து கொலை செய்துள்ளனர்.. இதுகுறித்து காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murer in up for illegal love


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->