பக்கத்துவீட்டு பையனுடன் உல்லாசம்..! தட்டிக்கேட்ட உறவினருக்கு கணவருடன் சேர்ந்து மோசமான தண்டனை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள அம்மன்குடி பகுதியை சார்ந்தவர் அறிவழகன் (வயது 47). இவர் விவசாயியாக பணிசெய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இவரது அண்ணன் மகன் முத்துமாணிக்கம் என்பவரை வெட்டி கொலை செய்துள்ளார். 

இந்த கொலை தொடர்பாக அறிவழகனுடைய மகன் பிரகாஷ் (வயது 20) அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், தனது தந்தையை இப்பகுதியை சார்ந்த உறவினரான முத்துமாணிக்கம் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி, தினேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். முத்துமாணிக்கத்தின் மனைவி மற்றும் தினேஷிற்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 

இதனை தனது தந்தை கண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தன் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது குறித்த விசாரணை மேற்கொள்ளையில், முத்துமாணிக்கம் மற்றும் கலைச்செல்வி, தினேஷ் ஆகியோர் தலைமறைவாகினர். 

இவர்கள் அனைவரும் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இவர்களை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மூவரும் திருவையாறு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in thirukkattupalli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->