குடிபோதையில் வந்த கணவனை கொன்று, மனைவி செய்த கேவலமான செயல்.!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். முத்துக்கறுப்பன் தினமும் கிடைக்கும் வருமானத்தில் மது குடித்து வந்து அஞ்சலியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 31ம் தேதியும் அது போலவே அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதன் காரணமாக மிகுந்த ஆத்திரம் அடைந்த அவரது மனைவி அவரை கட்டிலில் வேகமாக பிடித்து தள்ளியுள்ளார். அதன் பின்னர் அஞ்சலை தனது குழந்தைகளுடன் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில், சற்று நேரம் கழித்து முத்துக்கருப்பண் எழுந்து பார்த்தபோது அவர் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளார். அவரை எழுப்பிய போது எந்த அசைவும் இல்லை. உடனே அவர் இறந்தது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, முத்துக்கருப்பன் உடலை இழுத்துச் சென்று வீட்டருகே இருக்கும் கிணற்றில் தூக்கி வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார்.

death, seithipunal

முத்துக்கருப்பன் கிணற்றில் பிணமாக கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி அவரின் உடலை வெளியே கொண்டுவந்தனர். பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முத்துக்கருப்பன் உடலை காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். அப்போது விசாரணை நடத்தியதில் முத்துகருப்பன் இறப்பு எப்படி நேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக, அஞ்சலை மீது கொலை வழக்குப் பதிவு செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் காரணமாக தந்தையையும், தாயையும் பிரிந்த குழந்தைகள் கதறி கதறி அழுததை பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும் மனம் கலங்கி நின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in pudhukottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->