சகோதரனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவி.! ஆத்திரத்தில் கணவன் எடுத்த இறுதி முடிவு.!!
murder in mumbai
மும்பையில், காந்திவிலிதியில் உள்ள கணேஷ் நகரை சேர்ந்த இமாம் பஸ்திவாலா என்பவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். பஸ்திவாலாக்கு 6 குழந்தைகளும், 2 மனைவிகளும் உள்ளனர். இவர் தனது இரு மனைவியுடனும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பஸ்திவாலா 2-வது மனைவியான பகின் தனது சகோதரன் முறையுள்ள ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக சந்தேகப்பட்டார். இதன் காரணமாக இருவருக்கும் நிறைய தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இதுகுறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பஸ்திவாலா மனைவி என்றும் பாராமல் அவரது கழுத்தை ஆவேசத்துடன் நெறித்துள்ளார்.
இதன்காரணமாக அவரது மனைவி பகின் மூச்சுச்திணறி மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரது மனைவி மயங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ்திவாலா, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவிக்கவே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினார். பஸ்திவாலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.