மகளின் கண்முன்பே., கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த 12ஆம் தேதி இரவு முருகன் வீட்டிற்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது மனைவி தேவி வீட்டில் இல்லை.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தேவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு தீவிர விசாரணை செய்ததில் தேவி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வாக்குமூலத்தில், "வினோத்திற்கும், எனக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருப்போம். இதுகுறித்து கணவருக்கு தெரிந்ததும் என்னை கண்டித்தார். ஆனால், என்னால் தொடர்பை விட முடியவில்லை. எனவே எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம்.

poison, seithipunal

இது குறித்து எனது கள்ளகாதலன் வினோத்திடம் தெரிவித்த பொழுது அவரும் ஒப்புக் கொண்டார். கடந்த 12ஆம் தேதி என்னுடைய கணவர் மதுபோதையில் வீட்டில் வந்து தூங்கினார். எனவே இதுதான் சரியான நேரம் என நானும் எனது கள்ளகாதலன் வினோதம் சேர்ந்து முடிவுசெய்தோம். பின்னர் நான் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். வினோத் என்னுடைய வீட்டிற்கு வந்து எனது கணவனை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்."என தெரிவித்துள்ளார்.

கள்ளக்காதலன் வினோத் சம்பவம் நடந்த மறுநாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை சரியான பின்னர் அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

முருகன் கொலை செய்யப்பட்ட பொழுது தேவி தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றுவிட்டார். ஆனால், அவருடைய மகள் வர மறுத்து வீட்டிலேயே இருந்துள்ளார். கொலை நடந்த பொழுது அவர்களுடைய மகள் தான் இதனை கவனித்த இருக்கின்றார். அவர் தான் அடையாளம் காட்டியிருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in kummidipoondi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->