எடுத்தது திருமண ஏக்கம்.! செய்யக்கூடாத காரியத்தை செய்து அதிர்ச்சியில் ஆழ்த்திய வாலிபர்.!
Men suicide in bapanasam
பாபநாசம் அருகே இருக்கும் ராஜகிரி வடக்கு தெருவைச் சேர்ந்த மைதீன் என்பவரது மகன் அப்துல்லா (வயது 27) என்பவர் எந்த விதமான வேலைக்கும், செல்வதில்லை. வீட்டிலேயே வெட்டியாக சாப்பிட்டு தூங்கி, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். வேலைக்கு போகாமல் பெண் கேட்டால் எவர் கொடுப்பார்,? நமக்கல்லவா அசிங்கம் என நினைத்த பெற்றோர் திகைத்துள்ளனர்.
பின்னர் அப்துல்லாவிடம் கொஞ்சம் கூட சம்பாதிக்காமல் ஊர் சுற்றி வருகிறாயே, முதலில் வேலைக்கு போ பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவுரை வழங்கியுள்ளனர். சில வசவுகளும் கொடுத்துள்ளனர். இதனால் அப்துல்லா மனமுடைந்துள்ளார்.
பின் தனது வீட்டில் இருந்தவாறே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பின்னர் அவரது பெற்றோர் போலீசிற்கு தெரிவிக்கவே, பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.