மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த கணவன்.!! எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட சோகம்.!!
men death in puduchery
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் பாரதி நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருநெல்வேலியை சேர்ந்த சண்முகசுந்தரி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
சண்முகசுந்தரி அவரது பெற்றோரை பார்ப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு திருநெல்வேலி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வரும் புருஷோத்தமன் வழியில் பரோட்டா வாங்கி கொண்டு வந்துள்ளார். வீட்டில் பரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டே அவரது மனைவி சண்முகசுந்தரியுடன் செல்போனில் பேசி சிரித்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது திடீரென அவரது தொண்டையில் பரோட்டா சிக்கியது. எனவே, தொடர்ந்து பேச முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. புருஷோத்தமன் பேசாத காரணத்தினால் சண்முகசுந்தரி சிறிது நேரம் கூப்பிட்டு பார்த்து விட்டு, பின்னர் அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பிறகு மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் என்ன ஆயிற்று என பதட்டம் அடைந்த அவர், அவரது உறவினர்களுக்கு போன் செய்து சம்பவத்தை எடுத்துக் கூறவே அவர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது வீடு பூட்டப்பட்டு இருந்தது, பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் சாப்பிட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
அவரை உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது புருஷோத்தமனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திருமணம் ஆகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் கணவரை இழந்து அந்தப் பெண் பெரும் சோகத்தை அனுபவித்து வருகின்றார். இச்சம்பவம் உறவினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.