அப்படி ஒரு வீடியோவை மணமகனுக்கு அனுப்பிய மணமகள்..! நின்று போன திருமணம்..!
marriage stopped in chennnai
சென்னை நெசப்பாக்கம் அருகே இருக்கும் இளம்பெண் ஒருவருக்கும், அயனாவரத்தை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் வரவேற்பு விழா நடைபெற்று கொண்டிருந்த பொழுது மணமகனின் வாட்சப் எண்ணிற்கு மணமகளின் புகைப்படம் வேறு ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருப்பது போன்று வந்துள்ளது. அத்தோடு வீடியோவும் தொடர்ந்து வந்துள்ளது.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனடியாக திருமணத்தை நிறுத்தினார். பின்னர் திருமண நாளில் தன்னுடைய உறவுக்கார பெண்ணுக்கு தாலி கட்டி மணமுடித்துக் கொண்டார். இது போன்ற செயலில் ஈடுபட்டது யார் என்பதை அறிந்துகொள்ள பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் அந்த இளம் பெண் தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு நபரை காதலித்து வந்ததும், இருவரும் சேர்ந்து திருமணத்தை நிறுத்த திட்டம் போட்டதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தன்னுடைய மகள் விருப்பப்பட்ட இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோர்கள் சம்மதித்துள்ளனர்.
English Summary
marriage stopped in chennnai