மணமேடையில் வேறொருவரை திருமணம் செய்த பெண்.! அதிர்ச்சியில் மணமகன்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் இருக்கும், ராம் நகர் மாவட்டம், சென்னப்பட்டினம் தாலுகாவைச் சேர்ந்த பாக்ய ஸ்ரீ என்பவருக்கு எலியூர்  கிராமத்தைச் சேர்ந்த பசவராஜ் என்பவருடன் ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நடந்த நிலையில், நேற்று காலை இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது மணமகளின் தாய்க்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர் மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதன் காரணமாக மணமகள் வீட்டார் குழப்பமடைந்து மணமகன் வீட்டினரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திருமண மண்டபமே குழப்பத்தில் ஆழ்ந்தது. பின்னர் அவருக்கு தன்னுடைய மகளை கட்டி தரமாட்டேன் என்று மணமகள் வீட்டினர் மறுத்துவிட்டு இருக்கின்றனர்.

மாப்பிள்ளை எனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி கெஞ்சி கேட்ட பிறகும், மணமகள் வீட்டார் மறுத்துவிட்டு தங்களுடைய உறவுக்கார பையன் ஒருவனுடன் பேசி அதே மண்டபத்தில் திருமணத்தை நடத்தி முடித்தனர். கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனதால், மாப்பிள்ளை அழுகாத குறையாக மண்டபத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage girl married another person in front of marriage boy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->