திருமணம் முடிந்தவுடன், தன் ஆசைதீர மணப்பெண் செய்த வேலை.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


திருமணம் என்றாலே திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை வீட்டிற்கு பெண் சென்று குத்துவிளக்கு ஏற்றுவது தான் கேள்விப்பட்டிருப்போம். அதன்பிறகு இருவரும் மணமகள் பிறந்த வீட்டிற்கு செல்வார்கள். ஆனால் ஒரு புதுப்பெண் செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. 

வட இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் திருமணம் முடிந்த கையோடு தனது கணவனுடன் தன வீட்டிற்கு சென்றுள்ளார். அந்தப் பெண் தனது வீட்டுக்கு சென்றவுடன் அவரது தாயார் மகளுக்கு மிகவும் பிடித்த பானி பூரியை தயார் செய்து வைத்துள்ளார். 

பானிபூரி பார்த்தவுடன் தான் ஒரு மணப்பெண் என்பதை மறந்து தான் அணிந்திருக்கும் நகைகளுடன் பானிபூரியை  ஆசை ஆசையாக சாப்பிடுகிறார். இதனை பார்த்த உறவினர்கள், தான் ஒரு மணப்பெண் என்பதை மறைந்துவிட்டார் என்று அதிர்ச்சியில் உள்ளனர். இதை அந்த பெண்ணின் வீட்டில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage girl eating pani poori


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->