உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, 4 வாலிபர்களை திருமணம் செய்து கொண்ட பெண்.! இறுதியில் நடந்த விபரீதம்.!!
marriage cheating woman arrest
ஐதராபாத்தை சேர்ந்த நரசிம்மா வேணுகோபால் என்பவர் தனது தாய்-தந்தையை நன்றாக கவனித்துக்கொள்ளும் பெண் தேவை என்று திருமண தகவல் வையத்தில் பதிவு செய்தார். இதனை பார்த்து கடந்த ஆண்டு அருணா என்ற பெண், நரசிம்மா வேணுகோபாலிடம், உங்களது பெற்றோரை நான் நன்றாக பார்த்து கொள்வேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி மயக்கியுள்ளார்.
அவர் கூறியதை நம்பி நரசிம்மா வேணுகோபாலும் திருமணத்துக்கு சம்மதித்தார். பெற்றோர்களின் சம்மதத்துடன் நரசிம்மா வேணுகோபால் - அருணா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங்கள் குடும்பம் நடத்திய அருணா, கணவர் செய்து போட்ட நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
அருணா வீட்டில் விட்டுச் சென்ற பெட்டியை நரசிம்மா வேணுகோபால் திறந்து பார்த்தார். அப்போதுதான் அருணாவின் வாழ்க்கை ரகசியங்கள் அவருக்கு தெரிந்துள்ளது. அருணா மேலும் 3 பேரை திருமணம் செய்திருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் அந்த பெட்டில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நரசிம்மா வேணுகோபால் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருணாவை பிடித்து விசாரணை நடத்தினர்.
முதலாவதாக ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அருணா, ரூ.15 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். இரண்டாவதாக ஹரீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு ரூ.20 லட்சம் ஏமாற்றியுள்ளார். இவர்களை தொடர்ந்து அமெரிக்காவில் வசித்து வரும் பவன்குமாரை திருமணம் செய்து ரூ.50 லட்சம் வரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.
மோசடிப் பெண் அருணா, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். இதுபோன்று 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அருணா மேலும், ஒரு வாலிபர்களுக்கும் திருமண ஆசை காட்டி வலைவிரித்துள்ளார். அதற்கு முன்னதாக அருணா காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டார். தற்போது அருணா சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
marriage cheating woman arrest