பூஜாவுக்கு இது 15 வது திருமணம்.! 8 வது நாளில் அதிர்ந்துபோன 80'ஸ் கிட்ஸ்.!
madhya pradesh seema khan
மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் 15 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், போபால் நகரை சேர்ந்தவர் பிரசாத் நாத். பல ஆண்டுகளாக இவருக்கு திருமணம் ஆகாததால், பெண் தேடி வந்தார். அப்போது அவரின் உறவினர் தினேஷ் என்பவர் பூஜா என்ற ஒரு பெண் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.
அதன்பேரில் பெண் பார்க்க சென்ற பிரசாத்க்கு, பூஜாவை பார்த்ததும் பிடித்துவிட்டது. இருவருக்கும் பிடித்துப் போனதால் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து எட்டு நாட்கள் ஆன நிலையில், பூஜா தினேஷுக்கு போன் செய்து தனக்கு உடல்நிலை சரியில்லை தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரசாத்தும், தினேஷ் வீட்டுக்கு தனது மனைவியை அனுப்பி வைத்துள்ளார். இரண்டு நாட்களாகியும் பூஜா போன் செய்யாததால், பிரசாத் போன் செய்து பார்த்துள்ளார். அப்போது பூஜா மற்றும் தினேஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த பிரசாத் தனது வீட்டில் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதிலிருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் ஏமாந்து போனதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் பூஜா குறித்து புகார் அளித்துள்ளார்.
அப்போது, போலீசார் பிரசாத்துக்கு பல அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர். ஆம் அவர் பெயர் உண்மையில் பூஜை இல்லை. அவர் பெயர் சீமா கான் என்றும், அவருக்கு இது முதல் திருமணம் இல்லை பிரசாத்தை அவர் 15வது கணவராக திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் போலீசார் அதிர வைத்தனர்.
போலீசார் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சீமா கான் பிரசாத் முன்பாக 14 பேரை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து பணம், நகைகளை கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது.
இவர்களில் மொத்தம் 15 க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கும்பலாக செயல்பட்டு வருவதும், இதில் 3 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மேலும் 8 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
English Summary
madhya pradesh seema khan