பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை கரம்பிடித்த அரியலூர் மாவட்ட இளைஞர்.! நெகிழ்ச்சியில் பெண் கூறிய வார்த்தைகள்.!
LOVE WITH PILIPPAINS GIRL WITH ARIYALUR BOY
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அண்ணகாரன்பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தான் வேல்முருகன். இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனா ஜென் என்ற பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது நட்பானது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
அதன்பின்னர் இருவருக்கும், இந்து முறைப்படி கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில், வேல்முருகனின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதீத தூரம் என்பதால், ரோனா ஜெண்ணின் உறவினர்கள் வரவில்லை.
இதுகுறித்து தெரிவித்த ரோனா ஜென், " தனக்கு தமிழகத்தில் வாழவே விருப்பம் உள்ளது." என தெரிவித்துள்ளார்.
English Summary
LOVE WITH PILIPPAINS GIRL WITH ARIYALUR BOY