வாட்ஸ் ஆப்பில் வளர்ந்த காதல்.! ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வந்த கணவன் துடிதுடிக்க அரங்கேற்றிய கொடூரம்!!
husband killed wife for illegal affairs
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜேஷ்.வருகிறார் இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.அவர் மனைவி கவுதமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜேஷிற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுடன் வாட்ஸ்அப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கலைவாணி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தநிலையில் அவரை திருமணம் செய்துகொள்ள ராஜேஷ் முடிவு செய்தார்.
இந்நிலையில் விடுமுறை கிடைத்து ராஜேஷ் வீடு திரும்பியுள்ளார் அப்பொழுது அவர் குறித்து தெரிந்துகொண்ட ராஜேஷிடம் கவுதமி கடுமையாக சண்டை போட்டு, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் தனது காதலி கலைவாணி வீட்டில் பதுங்கி இருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கௌதமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் ராஜேஷின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர் தலைமறைவான நிலையில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
பின்னர் ராஜேஷ் கலைவாணி வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு விரைந்து அவரை கைது செய்தனர் மேலும் அவருக்கு உதவியாக இருந்த கலைவாணியையும் கைது செய்தனர் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
husband killed wife for illegal affairs