திருமணம் நடந்து ஒரு வருடம் ஆனது.. புருஷனிடம் கேட்டும் அது நடக்கவில்லை! இளம் பெண் எடுத்த திடீர் முடிவு!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ராணுவ வீரர். லட்சுமணன் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில நாளிலையே மீண்டும் ராணுவ பணிக்கு சென்றுள்ளார் லட்சுமணன்.

லட்சுமணனுக்கு சமீபத்தில் விடுமுறை கிடைத்ததை அடுத்து அவர் தன் மனைவியை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும், தனது மனைவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்துள்ளார். விடுமுறை நாட்கள் முடிந்ததை அடுத்து மீண்டும் பணிக்கு திரும்புவதாக லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

லட்சுமனுடன் தானும் வருவதாக ஈஸ்வரி கூறியுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுத்துவிட்டு, மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். இதனால் ஈஸ்வரி. மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனிடையே கணவன் தொலைபேசியில் பேசும்போது மீண்டும் இருவருக்கும் இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்து ஈஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband going to work wife is suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->