முத்தம் கொடுத்தபோது, நாக்கு ஒட்டிக்கிச்சு.. அதான் அறுத்துட்டேன்- கணவன் பகீர்.!  - Seithipunal
Seithipunal


குஜராத் அஹமதாபாத்தில் இருக்கும் தஸ்லீம் என்ற பெண் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வருகின்றார். இவருக்கு முன்னதாகவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தார். இந்த நிலையில்  கடந்த ஆண்டு தஸ்லீம் ஆயுப் மன்சூரி என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

ஆயுப் மன்சூரிக்கு  ஏற்கனவே இரு முறை திருமணமாகி இருக்கின்றது. அவர் தன்னுடைய இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருவதை தஸ்லீமிடம் மறைத்து தான் அவரை திருமணம் செய்து இருக்கின்றார். நாளடைவில் இது குறித்து தஸ்லீமிற்கு தெரிய வந்துள்ளது. 

எனவே, அவர்களை விட்டு விலகி வர கூறி தஸ்லீம் வற்புறுத்தி இருக்கின்றார். மன்சூரி வீட்டிலேயே இருந்ததால் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருவருக்கும் ஒருநாள் அதீத மோதல் ஏற்பட்ட அப்போது மன்சூரியை சமாதானப்படுத்த தஸ்லீமிடம் மன்சூர் பணம் கேட்டு இருக்கின்றார். ஆனால், தஸ்லீம் பணம் கொடுக்காமல் மன்சூருடன் வாக்குவாதம் செய்துள்ளார். 

அப்பொழுது மன்சூரி தஸ்லீம் நாக்கை இழுத்து அறுத்துப்போட்டு விட்டு பின் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். தஸ்லீம் தன்னுடைய அக்காவிற்கு வீடியோ கால் செய்யவே அவர்கள் உடனடியாக ஓடிவந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவரது நாக்கு தைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், தலைமறைவாக இருந்த மன்சூரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் முத்தம் கொடுக்கும் பொழுது நாக்கு சிக்கிக்கொண்டது. எனவே, என்ன செய்வது என்று தெரியாமல் நாக்கை வெட்டினேன் என பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார்.இதனை காவல்துறையினர் நம்பவில்லை. அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband cuts wife tongue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->