60-க்கு விருந்தாகிய 20 வயது பெண்.! இடைவிடாத தொல்லையால் இடைவேளையில் எஸ்கேப்.!
Girl sold by her parents in hydrabad
ஹைதராபாத்தில் இளம்பெண்ணை முதியவர் ஒருவரிடம் விற்ற கொடுமை நடந்திருக்கின்றது.
ஹைதராபாத்தில் 25 வயது பெண்ணை உள்ளூர் தம்பதிகளிடம் இருந்து விலைக்கு வாங்கி பக்ரைன் நாட்டை சேர்ந்த 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றார்.
அந்த நபர் பக்ரைன் நாட்டில் ஒரு ஓய்வு பெற்ற செவிலியர். அவருக்கு பெண்ணின் மோகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனக்கு தெரிந்த ஒருவரை தொடர்புகொண்டு இளம்பெண் ஒருவரை தேடும் விஷயத்தை கூறியிருக்கின்றார். எனவே அந்த தரகர் தான் அதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்க கடந்த அக்டோபர் 2019 இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார்.
குறிப்பிட்ட இளம்பெண்ணின் பெற்றோரிடமே விலைபேசி அந்த பெண்ணை வாங்கி கொடுத்து இருக்கின்றார். விலைக்கு வாங்கிய அந்த முதியவர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தும், சிகரெட்டால் சுட்டும் பல்வேறு கொடுமைகளை நிகழ்த்தியிருக்கிறார்.
இந்த இடைவிடாத கொடுமையை தாங்க முடியாமல் அந்தப் பெண் முதியவர் அசந்த நேரத்தில், அங்கிருந்து தப்பி அவருடைய சகோதரியிடம் தெரிவிக்க பின்னர் இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் கொடுமைப்படுத்திய முதியவர் மற்றும் பெண்ணை பேரம் பேசிய தரகர் என இருவரையும் கைது செய்திருக்கின்றனர். விற்ற தம்பதிகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English Summary
Girl sold by her parents in hydrabad