காதல் விவகாரத்தில் இளம்பெண் மரணம்.! விசாரணைக்கு பின் பகீர் தகவல்.!
girl death for love in anthra
சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ரெட்லபள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தனா என்பவர் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் சில நாட்களுக்கு முன்னதாக இளம் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டு ஊர் திரும்பியுள்ளனர்.
இதை கண்ட அவர்களின் இருவரின் பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் ஊர் பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து சந்தனா மற்றும் ஸ்ரீநிவாஸை அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி சந்தனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி அவரது உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்கு செய்து முடித்தனர்.
இது குறித்து காவல்துறையின் வழக்குப்பதிவு செய்த போது வேறு சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸை சந்தனா திருமணம் செய்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், சந்தனாவை கொன்றவர்கள் தன்னையும் கொல்லக்கூடும் என ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது தந்தை மறைவாக இருக்கின்றனர். இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English Summary
girl death for love in anthra