காதல் திருமணம்! பல கனவுகளோடு தேனிலவு சென்ற ஜோடிக்கு காத்திருந்த பெருந்துயரம்.! வெளியான மர்ம சம்பவம்!! - Seithipunal
Seithipunal


லண்டனில் வசித்து வந்தவர் உஷிலா பட்டேல். இவர் லண்டனைச் சேர்ந்த சாந்தாரியா  என்பவரை காதலித்து வந்துள்ளார். சாந்தாரியா செல்போன் கடையின் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

 அதனை தொடர்ந்து உஷிலா மற்றும் சந்தாரியா தம்பதியினர் தேனிலவிற்காக இலங்கை சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர் . அங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் அடுத்ததாக மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் இருவருக்கும் திடீரென உடல்நலபாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இருவருக்கும் இரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சல் ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் உஷிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது மனைவி இறப்பிற்கு காரணம் ஹோட்டலில் சாப்பிட்ட உணவு தான் என சந்தியா குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.ஆனால் அதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை முடியும்வரை சந்தாரியா அவரது நாட்டிற்கு திரும்ப இலங்கை காவல்துறை தடைவிதித்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl dead in honeymoon at srilanka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->