பணக்கார வரன், காதலியை கழட்டிவிட்ட இராணுவ வீரர்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!
ernakulam girl murder
கன்னியாகுமரி மாவட்டத்தில், இருக்கும் தமிழக கேரளா எல்லை பகுதியை ஒட்டிய அம்பூர் மலையடிவார கிராமத்தை சேர்ந்தவர் அகில். இவருக்கு 26 வயது ஆகிறது. சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு ராகி மோர் என்பவர் மிஸ்டு கால் மூலமாக அகிலுக்கு அறிமுகமாகியுள்ளார். இவருக்கு வயது 29 .
இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அதன் பின்னர் காதலாக மாறியுள்ளது. அவரை திருமணம் செய்வதாக கூறி அகில் வாக்களித்த நிலையில், ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ராக்கி எர்ணாகுளத்தில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். இருவரும் தங்களது காதலை தொடர்ந்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் அகிலின் குடும்பத்தினர், இந்த காதலுக்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன்பு அகிலுக்கு ஒரு பணக்கார பெண் வீட்டாரிடமிருந்து சம்பந்தம் வந்துள்ளது. இதனால், பணத்திற்கு ஆசைப்பட்டு அகிலின் குடும்பத்தினர் ஏழைப்பெண்ணின் ஆராய்ச்சியை தட்டி விட முடிவு எடுத்தனர். இதனை தெரிந்து கொண்ட ராக்கி தன்னைத்தான் அகில் திருமணம் செய்ய வேண்டும் இல்லை என்றால் சும்மா விடமாட்டேன் என அவரது குடும்பத்தினரும் மிரட்டி உள்ளார்.
Tamil online news Today News in Tamil
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தார்கள். அந்த நேரம் அந்த வசதியான வீட்டுப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது பணக்கார ஆடம்பர வாழ்விற்கு தனது காதலி இடையூறாக இருப்பார் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து காதலியை அழைத்து வந்து சமாதானம் செய்ய முயன்றார்.
ஆனால், அவர் சமாதானம் ஆகாததால் குடும்பத்துடன் சேர்த்து அடித்துக் கொன்று அவரது வீட்டு வளாகத்திற்கு உள்ளேயே இருக்கும் தோப்பிலேயே புதைத்துவிட்டு, ராணுவ பணிக்கு செல்வதாக கூறி சாதாரணமாக புறப்பட்டு சென்று விட்டார். இந்நிலையில், இதுகுறித்து பெண்ணை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் புகார் அளித்ததை, தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ஜாக்கியின் செல்போன் நகர்வுகளை வைத்து அகிலின் வீட்டை துப்பு துலக்கிய போலீசார், அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது தோப்பிற்குள் சந்தேகப்பட்ட இடத்தை தோண்டவும், ராக்கியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் அவர்களின் சகோதரர் இருவரை கைது செய்துள்ளனர். அகிலயும், அவரது தந்தையையும் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil