பெண் ஓரினச்சேர்க்கையாளர் என தெரிந்த தந்தை துடிதுடிக்க எடுத்த அதிர்ச்சி முடிவு .!  - Seithipunal
Seithipunal


சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பளித்தது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு விதமான விமர்சனங்களை வைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லி பகுதியைச் சேர்ந்த 60 வயது தம்பதிக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். அவர்களின் மூத்த மகளுக்கு திருமணத்திற்கு வரன் தேடும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அந்த மகள் தன்னுடைய பெற்றோரிடம் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவர் தனது பெண் தோழியுடன் இணைந்து வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரின் அந்த உறவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார். மகளை காணவில்லை என அந்த பெற்றவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த தந்தையின் செல்போனுக்கு சில நாட்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. தான் தன்னுடைய பெண் தோழியிடம் தனிமையில் வீடு எடுத்து வசித்து வருவதாக கூறினார்.

suicide, seithipunal

இருவரையும் வீட்டிற்கு வருமாறு தந்தை அழைக்கவே அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாக வந்து தங்கி இருந்துள்ளனர். அவரது தோழி பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கு ஒரு ஊருக்கு சென்று விட்டதால், அவரும் அவரது தந்தையும் தனிமையில் இருந்துள்ளனர். 

அந்த நேரத்தில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தந்தை தனது அறைக்குச் சென்று தாழிட்டுக் கொள்ள உள்ளிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று கதவை உடைத்து பார்க்கையில் அவர் இறந்து கிடந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death in delhi


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->