மகளுக்கு திருமணம் முடிந்தவுடன் கர்ப்பமான தாய்.. 40 வயதில் 4 குழந்தை! அதிர்ச்சி சம்பவம்!!
daughter marriage mother is pregnancy
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர்கள் சகன்லால் - தாலிபாய் தம்பதி. இருவருக்கும் இரண்டு மகள் இருக்கின்றனர். மேலும் ஒரு மகன் இருந்துள்ளார். இவர்களின் மகன் சில நாட்கள் முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். முதல் மகளுக்கு திருமணம் நடைபெற்று கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இரண்டாவது மக்கள் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மகன் இறந்துவிட்டதால் கடைசி காலத்தில் தங்களை யார் பார்த்துக்கொள்வார் என நினைத்து மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர். தாலிபாய்க்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுவிட்டதால் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமான தாலிபாய் தனது 40 வது வயதில் நான்கு குழந்தைகளை பெற்றுடுத்துள்ளார். அதில் இரண்டு பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் தாய் மீண்டும் கர்ப்பம் அடைந்து 4 குழந்தைகளை பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
daughter marriage mother is pregnancy