#சென்னை | காதலன் அனுப்பிய புகைப்படம்! வீடியோ வெளியிட்ட காதலி - விசாரணையில் இறங்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


சென்னை : மாதவரம் அருகே காதலன் வேறு பெண்ணை காதலிப்பதாக சொன்னதால், மனம் உடைந்த இளம் பெண், தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று கூறி, காணொளி வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாத்தூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஏஞ்சல். பிகாம் பட்டதாரியான ஏஞ்சலும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் தனுஷம் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து, திருமணத்துக்கு உண்டான ஏற்பாடுகளை செய்ய முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று காதலன் தனுஷ், ஏஞ்சலுக்கு ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, தான் இந்த பெண்ணை தான் காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் விரத்தி அடைந்த ஏஞ்சல், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வது செய்து கொள்வதற்கு முன்பு ஏஞ்சல் வெளியிட்டுள்ள காணொளியில், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. தேவையில்லாமல் அவனை (தனுஷை) போட்டு அடிக்க வேண்டாம். அவன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அதனால் நான் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏஞ்சல் தற்கொலை விவகாரத்தில், வாட்ஸ்அப் மற்றும் வீடியோ சாட் விவரங்களை கைப்பற்றிய போலீசார், அதனை வைத்து காதலன் தனுஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai angal suicide case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->