கள்ளக்காதல் ஜோடியை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து வெளுத்து வாங்கிய ஊர்மக்கள்.! நடுத்தெருவில் 3 பிஞ்சுகள்.!
bihar illegal affair case
கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலி வீட்டில் நுழைந்த தள்ள காதலனுக்கும், அவரின் காதலிக்கும் ஊர்மக்கள் சேர்ந்து திருமணம் செய்து வைத்த அவலம் அரங்கேறி உள்ளது.
பிஹார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டத்துக்கு உட்பட்ட சுகேலாலி கிராமத்தை சேர்ந்தவர் முத்து ராம். இவரின் மனைவி சசிகலா தேவி.
இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், முத்துராம் மும்பையில் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதன் காரணமாக மும்பை நகரிலேயே தங்கி தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
கணவன் இல்லாததால் சுசிலா தேவிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வினோத் ராம் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் இரவு நேரத்தில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக இவர்களின் தனிமை சந்திப்பு நடந்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு இந்த கள்ளக்காதல் ஜோடி ஊர் மக்களிடம் சிக்கிக்கொண்டது.
தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடியை மின்கம்பத்தில் கட்டிவைத்து ஊர்மக்கள் விடிய விடிய அடித்து உதைத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் பொழுது விடிந்ததும் சுசீலா தேவியின் கழுத்தில் தாலி கட்ட சொல்லி ஊர்மக்கள் கட்டாயப் படுத்தி, வினோத் ராம் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது.
பின்னர் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, தங்களது ஊரைவிட்டு இருவரையும் விரட்டி அடித்துள்ளனர். கள்ளக்காதல் ஜோடியின் இந்த திருமணத்தால் வாடகை கார் ஓட்டுநர் முத்துராம் மற்றும் அவரின் மூன்று குழந்தைகள் நிர்கதியை நிற்கின்றனர்.
English Summary
bihar illegal affair case