பெற்றோர் பெண் தர மறுத்ததால், கண்முண்ணே பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்.!
arrest by kidnapping and harassment
திருச்சி மதுரை சாலையில் உள்ள குப்பாங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணின் தாய் குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவரின் தந்தை மற்றும் சகோதரர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.
அந்த இளம்பெண்ணின் நெருங்கிய உறவினரான சுரேஷ் குமார் என்பவர் காந்தி மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக அந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து இருக்கிறார். இருப்பினும் அந்த பெண் காதலை ஏற்க மறுத்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண்ணின் தந்தையிடம்பெண் கேட்கவே பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு பெண் தர மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் குமார் அந்த பெண்ணை அடைந்தே தீர வேண்டுமென திட்டமிட்டு கடந்த 16ஆம் தேதி சமயபுரம் கோவிலுக்கு ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று தாலி கட்டியுள்ளார். அதன் பின்னர் அவரை ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர்.
அதன் பின்னர் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்று அந்த தன் சகோதரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படியே தங்கள் கண்ணெதிரிலேயே பெண்ணின் வாழ்க்கை பாழானதை நினைத்து அந்த பெண்ணின் சகோதரன் மற்றும் தந்தை மிகுந்த வேதனையில் இருப்பதாக தெரிகிறது.
English Summary
arrest by kidnapping and harassment