அடிக்கடி உல்லாசம், நான் கேட்டது கிடைக்கல., அதான் ஆத்திரத்தில் துடி, துடிக்கவிட்டேன்.! கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


ஆம்பூர் அருகே பச்சைகுப்பம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18 ஆம் தேதி உடலில் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் யார் என்பது குறித்து விபரங்கள் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து ஆம்பூர் வட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அந்த இளம் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணை தஞ்சாவூர் மாவட்டம் மேல் மோட்டூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி சிவரத்தினம் என்பது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற இளைஞர் கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது தெரிய வந்துள்ளது.

ஏழுமலையை பிடித்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. சிவரத்தினம் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். திருச்சி சமயபுரத்தில் இருக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஏழுமலை உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சிவரத்தினம், seithipunal

இந்நிலையில், ஏழுமலை சிவரத்தினத்தை ஆம்பூர் அழைத்து வந்து ஏழுமலை பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தண்டவாளத்தில் தூக்கி வீசியுள்ளார்.

இந்த தகவலை தெரிந்துகொண்ட காவல்துறையினர் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தியத்தில், "இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் பழக்கம் ஏற்பட்டது. எங்களுடைய நட்பு காதலாக மாறியது. முதலில் மறுத்த சிவா பின்னர் ஏற்றார். அடிக்கடி திருவண்ணாமலையில் இருக்கும் என்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருப்பேன்.

நான் அடிக்கடி பணம் வாங்குவேன். இதுபோல கடைசியாக சென்றபோது பணம் கேட்டேன். இல்லை என மறுத்ததில் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொன்று தூக்கி வீசினேன்." என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ambur murder case new update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->