மனைவியின் மீதுள்ள சந்தேகத்தை தீர்க்க கணவன் செய்த கொடூர செயல்.! துடிதுடித்த பெண்ணிற்கு.,நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அருகே கட்டிட தொழிலாளியாக கோமதிநாயகம் என்பவர் இருந்து வந்துள்ளார். இவருக்கு முத்து மாரி என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 20ஆம் தேதி முத்துமாரி வீட்டில் இருந்தபோது சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் விரைந்து சென்று முத்துமாரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது சிறிது தூரம் சென்று மீண்டும் கோமதி நாயகத்தின் வீட்டிற்கு வந்துள்ளது. மேலும் முத்துமாரி அணிந்த நகைகள் எதுவும் திருடு போகவில்லை என்பது போலீசாருக்கு புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தடவியல் நிபுணர்கள் சோதனை நடத்திய போதும் கை ரேகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், கோமதி நாயகத்தின் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் வந்துள்ளது.

அவரிடம் தீவிர விசாரணை நடத்திபதில் தன் மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதுபோன்ற அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும், 20ஆம் தேதி அதிகப்படியான தகராறு காரணமாக அவரை வெட்டி விட்டு பின்னர் வேலைக்கு சென்றதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a women murdered in thuthukudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->