சந்தேகப்பட்ட கணவனுக்கு துடிதுடிக்க நேர்ந்த சம்பவம்!! மனைவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்!!  - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மோடமங்கலம் எம்ஜிஆர் நகரில் கல்யாணசுந்தரம் என்ற தறி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முன்னதாகவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றது. இருப்பினும், அவர் தன்னுடன் வேலை பார்த்த பூங்கொடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 19 வயதில் மற்றொரு மகனும் இருக்கின்றனர். மேலும், கல்யாண சுந்தரத்திற்கு பிற பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கல்யாணசுந்தரம் பூங்கொடியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பூங்கொடியை வேலைக்கு வரவேண்டாம் என கல்யாணசுந்தரம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கல்யாண சுந்தரம் நேற்று அதிகாலை வேலைக்கு புறப்பட்ட போது நானும் உங்களுடன் வருகிறேன் என பூங்கொடி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது கத்தியால் குத்திக் கொன்று விடுவேன் என மனைவியை மிரட்டி உள்ளார். இதனால் பூங்கொடி மிகவும் ஆத்திரமடைந்து கல்யாணசுந்தரத்தை தாக்கி கீழே தள்ளியுள்ளார்.

ஆவேசமாக தாக்கி கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ஓடி விட்டார். பூங்கொடி எதுவும் தெரியாதது போல பொதுமக்களிடம் நாடகமாடியுள்ளார். இது குறித்து போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின்னர் பூங்கொடி பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

"கல்யாணசுந்தரம் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு எனது நடத்தையில் சந்தேகம் அடைந்து சித்திரவதை செய்தார். நான் மிகவும் மன வேதனையில் துடித்தேன். நேற்று அதிகாலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டேன்." என அவர் தெரிவித்துள்ளார். பூங்கொடியை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A WOMEN KILLED HER HUSBAND


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->