காதலியுடன் முதல் நாளில் மணமகன் செய்த காரியம்.!! அதிர்ச்சியில் உறைந்த மணமகள்!!
A lovers suicide in kumbakonam
கும்பகோணம் அருகே அரித்துவாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார், என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் ஈஸ்வரியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் ஈஸ்வரியை கண்டித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அருண்குமார் ஈஸ்வரியின் பெற்றோரிடம் சென்று நானும், ஈஸ்வரியும் காதலிக்கிறோம். அவரை எனக்கு மணமுடித்து கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் அருண்குமாரை திட்டி திருப்பி அனுப்பிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து அருண்குமாரும் ஈஸ்வரியும் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். பின்னர் அருண்குமாருக்கு அவரது பெற்றோர் உறவினர் பெண்ணை பேசி திடீரென திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அருண்குமார் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்களது மனம் மாறவில்லை.
நாளை அவர்களது திருமணம் நடைபெற இருந்த நிலையில் ஈஸ்வரியும், அருண்குமாரும் கும்பகோணம் அருகே ஒரு இடத்தில் சென்று இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இருவரது பெற்றோருக்கும் மன வேதனையை கிளப்பி உள்ளது. மேலும், அருண்குமாருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணும் இதனால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
English Summary
A lovers suicide in kumbakonam