திருமணம் செய்யாமல் காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண்.! திடீரென ஏற்பட்ட சோகம்.!!
a girl suicide in kunrathur
குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த சீதா (வயது 18) என்னும் இளம்பெண், கெலட்டி பேட்டையை சேர்ந்த அரி கிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகவே தனது காதலன் வீட்டிலேயே சீதா தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது காதலன் வீட்டில் இருந்தவாறே திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்ததும் அரி கிருஷ்ணன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றார். பின்னர் உடனே அவர், உடைந்த பாட்டிலால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதன் காரணமாக அவரது கழுத்திலும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, குன்றத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தற்கொலை செய்து இறந்து போன சீதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக சீதாவின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
English Summary
a girl suicide in kunrathur