3 வயது குழந்தையின் இடுப்பை முறித்து, சித்தப்பா கொடுமை.! இறுதியில் சோகம்.!
3 years baby murder in karnataka
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த துர்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு சத்திய மூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதில், வரலட்சுமி என்ற 5 வயது மகளும், அருண் என்ற 3 வயது மகனும் இருக்கின்றனர். நான்காண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்தி இறந்த பின்னர், தனியாளாக குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் 9 மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்பவருடன் வாழத் துவங்கி உள்ளார். இதன் காரணமாக தன்னுடைய மகளை தங்கை வீட்டில் கேரளாவில் விட்டு சென்றுள்ளார். கடந்த ஒன்றாம் தேதி மகளை பார்க்க துர்கா கேரளாவிற்கு சென்று இருக்கின்றார். மகனை வெங்கடேசனிடம் விட்டுவிட்டு பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மகளை காணப்புறபட்டுள்ளார்.
இந்நிலையில், அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக துர்காகாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார். சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. காவல்துறையினர் விசாரணையில் வெங்கடேசன் குழந்தையை சிகரெட்டால் சூடு வைத்து, மது குடிக்க வைத்து குழந்தையை தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மதுபோதையில் இருந்த வெங்கடேசன் குழந்தையின் இடுப்பு எலும்பை உடைத்து கொலை செய்ததை விசாரணையில் காவல்துறை உறுதி செய்திருக்கின்றது. ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னுடைய குழந்தைகளை வெங்கடேசனக்கு பிடிக்கவில்லை என்றும், இதன் காரணமாகவே அவர் கொலை செய்துவிட்டார் என்றும், துர்கா தெரிவித்துள்ளார்.
English Summary
3 years baby murder in karnataka