உறவுக்கு 'நோ' சொன்ன பெண்ணை, நோகடித்து சிறுவன் செய்த காரியம்.! பிணத்துடன் செய்த செயல்.!
14 years boy killed illegal lover
14 வயது சிறுவன் பெண்ணை கொலை செய்து பிணத்துடன் தூங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் அந்த கணவனின் சகோதரர்கள் இருவர் வந்துள்ளனர். கணவரின் சகோதரர்கள் ஒரு வீட்டிலும், தமபதிகள் குழந்தைகளுடன் ஒரு வீட்டிலும் தங்கி இருந்துள்ளனர்.
கணவரின் சகோதரர்கள் தங்கியிருந்த வீட்டில் 14 வயது சிறுவன் ஒருவனும் தங்கி இருந்துள்ளார். கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அந்த சிறுவன் அடிக்கடி தம்பதிகளின் வீட்டிற்கு வந்து சென்று இருக்கின்றான். அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனை கணவர் கண்டித்து இருக்கின்றார்.
ஆனால், இவர்களுக்கு இடையேயான உறவு நீடித்துக் கொண்டே வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கணவன் தன்னுடைய மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பீகாருக்கு சென்றுள்ளார். ஆனால் மனைவி "தான் வரமாட்டேன்" என்று கூறி இங்கேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் வியாழக்கிழமை மனைவிக்கு போன் செய்தபோது எடுக்காததால் சந்தேகம் அடைந்த கணவர் தன்னுடைய சகோதரர்களுக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார். அவர்கள் சென்று பார்த்த பொழுது அந்த சிறுவன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் அந்த பெண் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுவன் தான் உடல் உறவுக்கு அழைத்த போது அந்த பெண் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே தான் அவரை கொலை செய்து விட்டு இங்கேயே தூங்கினேன் என்று தெரிவித்துள்ளான். இது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
14 years boy killed illegal lover