ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணம்.. திடீரென இளைஞர் செய்த செயலால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவருடைய இந்த நடை பயணம் தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் லூதியானாவில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார்.

அப்பொழுது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவை அடுத்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் நடைப்பயணம் தொடங்கிய நிலையில், ஜாக்கெட் அணிந்திருந்த நபர் ராகுல் காந்தியை நோக்கி வேகமாக ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் மற்றும் காந்தியுடன் வந்த மற்ற கட்சிக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man try to hug Rahul Gandhi in Bharat jodo yatra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->