இந்தியா : ஊழல் புகாரில் சிக்கிய ஆளுங்கட்சி அமைச்சரின் நாயை பராமரிக்க சொகுசு மளிகை.!
West Bengal TMC Minister Partha Chatterjee arrest case info
கடந்த 2016-ம் ஆண்டு மம்தா தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு நடத்திய தேர்வில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சுமார் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளதால் இதனை அமலாக்கத் துறையும் விசாரணை செய்தது.
தொடர்ந்து, இவ்வழக்கு குறித்து 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் 20 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், பார்த்தா சட்டர்ஜிக்கு தெரிந்த மற்றொரு நபர் மோனலிசா தாஷ் பெயரில் மட்டும் 10 மாளிகை வீடுகள் உள்ளது. அதில் ஒரு சொகுசு மாளிகையில் பார்த்தா சட்டர்ஜியின் வளர்ப்பி நாய்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
West Bengal TMC Minister Partha Chatterjee arrest case info