ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட அமைச்சர் - 4 முறை அழைத்தும் கண்டுகொள்ளாத முதல்வர் மம்தா.!
West Bengal Industries Minister Partha Chatterjee arrest case info
கடந்த 2016-ம் ஆண்டு மம்தா தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சுமார் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளதால் அமலாக்கத் துறையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இறங்கியது.
இவ்வழக்கு குறித்து 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் 20 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று காலை பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், அமைச்சர் பாா்த்தா சட்டா்ஜி கைது செய்யப்பட்ட பின், முதல்வர் மம்தா பானர்ஜியை 4 முறை தொலைபேசி மூலமாக அழைத்ததாகவும், மம்தா அவருக்கு பதில் எதுவும் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
West Bengal Industries Minister Partha Chatterjee arrest case info