தெருவில் கிடந்த வாக்கு சீட்டுகள்.! போலீசாரின் முதல் கட்ட விசாரணை முடிவுகள்.!
vote slip on road
பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் குன்னம் அருகே சாலையோரம் வாக்குமுத்திரை பதியப்பட்ட வாக்குச்சீட்டுகள், கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் குன்னம் அருகே சித்தளி பகுதியில் குறிப்பிட்ட சின்னத்தில் வாக்கு முத்திரை பதியப்பட்ட இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள் சாலையோரத்தில் பறந்து கிடந்ததுள்ளது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துரைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வாக்குச்சீட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகினர்.
முதற்கட்ட விசாரணையில் மேலமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் சின்னங்கள் அடங்கிய இந்த வாக்குச்சீட்டுகள் அவை என்பது தெரியவந்துள்ளது.