அமைச்சரின் மகனை நையப்புடைத்த கிராம மக்கள்.!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகியும், அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான நாராயண் ஷாவின் மகன் பப்லுகுமார். இவரை கிராம மக்கள் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

அமைச்சருக்கு சொந்தமான தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும், அங்கிருந்தவர்களை விரட்டியடிக்க பப்லுகுமார் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதனால், அலறி அடித்துக்கொண்டு அங்கு இருந்தவர்கள் ஒரிய பொது ஏற்பட்ட நெரிசலில், ஒரு குழந்தை உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இது குறித்து அறிந்து அங்கு உள்ள கிராம மக்கள் பலர், கும்பலாக சென்று வாகனத்தில் வந்த அமைச்சரின் மகனை எட்டி உதைத்தனர். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தற்போது அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காயம் அடைந்த கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சரின் மகனுக்கு சொந்தமான துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villagers beat minister son


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->