விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம்: யாரை ஆதரித்து? எங்கு தொடங்குகிறார் தெரியுமா? உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அமெரிக்காவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி உடன்படிக்கையின் போது, கையொப்பமிட வந்த விஜயகாந்த் தன்னால் பேச முடியவில்லை என செய்தியாளர்களிடம் சைகை மூலம் கூறினார்.

இது தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் வருந்த செய்தது. ஆனால், அவர்களது தொண்டர்கள் மீண்டும் விஜயகாந்த் பூரண நலம் அடைந்து கம்பீரமான பாணியில் பேசவேண்டுமென ஆசை கொண்டனர்.அதற்காக காத்திருந்தனர்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  " விரைவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்"என கூறி வந்தார். இந்நிலையில், "இன்று சென்னையில் சில பகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்வார் " என்ற அறிவிப்பை தேமுதிக நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்டு தேமுதிக-வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதன்படி, வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ், தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெயவர்தன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

3 தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் விஜயகாந்த் பிரசார வாகனத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில் விஜயகாந்த் பாமக வேட்பாளர் சாம்பால் ஆதரித்து பிரசாரத்தை தொடங்குகிறார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth election campaign in today


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->