நிர்வாகிகளுக்கு திடீர் அழைப்பு விடுத்த விஜயகாந்த்.. தயாரான நிர்வாகிகள்!!
vijayakanth announced dmdk meeting
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கழக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 7.11.2019 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
தாங்கள் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
vijayakanth announced dmdk meeting