விஜயகாந்தும், நாங்களும் என்ன தவறு செய்தோம். ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்.! புலம்பும் விஜய பிரபாகரன்.!! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு அதிமுக மற்றும் திமுகவை தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. 

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த வகையில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. தற்போது தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை ஆதரித்து விஜய பிரபாகரன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் பிரச்சினையை பற்றி யாரும் பேசவில்லை. மாறி மாறி ஊழல் செய்ததை பற்றி பேசி வருகின்றனர். 1000 மற்றும் 1500 ரூபாய்க்காக சிந்திக்காதீர்கள். ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வரும் என கேப்டன் 15 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்துவிட்டார். தேமுதிக ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள். தேமுதிகவும், விஜயகாந்தும், நாங்களும் என்ன தவறு செய்தோம் என கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaya prabhakaran election campaign in cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->