சவால்விட்ட துண்டு சீட்டு உதயநிதிக்கு சவால்விட்ட விஜய பிரபாகரன்.!!
VIJAYA PRABAKARAN
நேற்று விருதுநகர் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், ''எங்களது சொந்த தோகுதியான விருதுநகர் தொகுதியை, நாங்கள் கேட்டு பெற்று உள்ளோம்.
தமிழக அரசியல் தலைவர்களில் நமது தலைவர் கேப்டன், ஈழ தமிழர்கள் மீது அக்கறையாக இருந்த காரணத்தினால் தான் எனக்கு பிரபாகரன் என்ற பெயரை வைத்து நம்பிக்கை காட்டினார். ஆனால், ஒரு சிலரோ அவரின் பெயரை சொல்லி, ஊரை ஏமாற்றி கொள்ளை அடித்து வருகிறார்கள்.
எப்போது துண்டு சீட்டை வைத்து பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின், அவரை போலவே துண்டு சீட்டை வைத்து பிரச்சாரம் செய்யும் உதயநிதி போகும் இடமெல்லாம் எல்லாருக்கும் சவால் விட்டு வருகிறார். சவால் விடுவதற்கு கூட இன்னொருத்தன் எழுதி கொடுத்ததை தான் படித்து சவால் விட வேண்டுமா?
நான் இப்போது துண்டு சீட்டு உதயநிதிக்கு சவால் விடுகிறேன், 'உங்களுக்கு தைரியம் இருந்தால் இலங்கையில் லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து விவாதம் நடத்த தயாரா?' நேரடியாக இருவரும் பேசி பார்க்கலாம்'' என்று பிரபாகரன் சவாலுக்கு சவால்விட்டு வெளுத்து வாங்கினார்.