மகனின் வெற்றிக்காக, துரைமுருகன் இறங்கி செய்த வேலை.! ஆரம்பமே இப்படியா.?
vellore election dmk plan
முன்னதாக வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் மக்களைவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. (ஜூலை 11) இன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளும் அதே வேட்பாளரையே மீண்டும் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்திற்காக வேலூரிலேயே முகாம் அமைத்து இருக்கிறார். இதில் திமுக சார்பில் வேலூர் மாவட்டச் செயலாளர்களான ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் மற்றும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உட்பட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற பொறுப்பாளர்களும், தேர்தல் பணிப்பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வேலூரில் முகாமிட்டுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் தேர்தல் பொறுப்பாளர்களில் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் இருப்பதனால், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை ஆர். காந்தி மற்றும் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார் ஆகிய மற்ற பொறுப்பாளர்களோடு முதல் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும் முதல்கட்டமாக முஸ்லிம் பிரமுகர்களையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார். இது வழக்கமாகத் தாம் சந்திக்கும் பணிகள் தான் என தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்க அணைக்கட்டு தொகுதியில் ஊழியர் கூட்டங்களில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
English Summary
vellore election dmk plan